தயிர் நன்மைகள் | Curd Benefits in Tamil

தயிர் நன்மைகள் | Curd Benefits in Tamil

மழை மற்றும் குளிர்காலங்களில் சில உணவுகளைப் பொறுத்தவரையில் இதை சாப்பிடலாமா? கூடாதா? நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா? என்ற மாதிரியான சந்தேகங்கள் நிறைய பேருக்கு இருக்கும். இந்த மாதிரியான ஒரு சந்தேகம்தான் குளிர்காலங்களில் தயிர் சாப்பிடலாமா? கூடாதா? என்பது பற்றியும் தயிர் நனமை பற்றியும் பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு

அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல் அடங்கும்.

yogurt benefits in tamil

உடல் சூடு

பிரியாணி போன்ற, உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடு பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர், வெங்காயம் சேர்க்கப்படுகிறது.

பெண்கள் ஆரோக்கியம்

மெனோபாஸ் பருவத்தை எட்ட போகும் பெண்கள் தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும்

அதே போன்று வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசனையாக இருக்கும்.

கால்சியம் சத்து

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே தயிர் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலிமையை கொடுக்கக்கூடியது.

எலும்பு துளைநோய் சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால் உணவில் கட்டாயம் தயிர் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

curd benefits in tamil

புரோபயாடிக் உணவு

அது மட்டுமல்ல, தயிர் ஒரு புரோபயாடிக் உணவு என்று சொல்கிறோம். அதாவது, நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை புரோபயாடிக் உணவு என்று சொல்லப்படுகிறது.

வாய்ப்புண்

குளிர்காலங்களில் தயிர் சாப்பிட சிறந்த நேரம் மதிய நேரம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண், பல்வலி குணமாகும். காரணம், இதிலுள்ள ஆன்டிபாக்டீரியாக்களின் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன.

மோர்

மோர் சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லதும் கூட. எல்லா காலங்களிலும் எல்லா வேளையிலும் சாப்பிடக் கூடியது, மோர் மட்டும்தான். தினமும் மோர் குடித்தால், அது பல்வேறு நோய்களையும் குணப்படுத்த உதவும்.

கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீர் இழப்பு ஆகியவற்றை சரி செய்யும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை சரி செய்யும்.

மூல நோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது. மோர் தான் சாப்பிட வேண்டும்.

அதே சமயத்தில் தயிரில் தண்ணீரை கலந்து அதை மோர் என்று பயன்படுத்தக் கூடாது. அது மோர் கிடையாது.

தயிரைக் கடைந்து அதிலிருந்து வெண்ணெய்யை பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர்.

தயிர் நன்மைகள் Curd Benefits in Tamil

இரவில் தயிர் என் சாப்பிட கூடாது?

இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. அதற்கு காரணம் இரவில் முன்பகுதியில் பகலின் வெப்பம் திடீரென குறைந்து இரவில் குளிர்ச்சியாக இருப்பதால் சூட்டால் இளகி நிற்பவை திடீரென இறுக ஆரம்பிக்கும்.

இதனால் தயிரின் சில்லிப்பாலும் கனமான தன்மையினாலும் ஜீரணக் குறைவு. மூச்சுத்திணறல் முதலியவற்றை ஏற்படுத்தலாம்.

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

அடுத்ததாக சாப்பிடலாமா? கூடாதா? என்று கேட்டால் சாப்பிடலாம். ஆனால் மதியம் மட்டும் சாப்பிடலாம்.

சில சமயத்தில் குளிர்காலத்தில் சரியாக துவையாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில்துவைந்த தயிரை சாப்பிடுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.

பொதுவாக குளிர் மிகுந்த சூழ்நிலைகளில் தயிர் சீக்கிரம் புளிப்பதில்லை. எனவே தயிர் சரியாக துவைந்துள்ளதா? என்று மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மூச்சுக் குழாய் அடைப்பால் ஏற்படும்  காமாலை, தோல் நோய், இரத்தக் குழாய்களில் கொதிப்பு முதலியவை தயிரை இரவில் அதிகம் சாப்பிடுவதால் எளிதில் விரிவடைகின்றன.

பால் மற்றும் பால் பொருட்கள சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

ஏனென்றால் இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க் கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்கள சாப்பிடலாம். அதிலும், பாலுடன் மஞ்சள் பொடி, மிளகுத்தூள், பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

 

 

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning