அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai

அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai

அழுகண்ணி மூலிகை   Alukanni Mooligai

அழுகண்ணி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு தாவர வகையாகும். அழுகண்ணி ஒரு பூக்கும் தாவரம். இது ஒரு அடி நீளம் வரை வளரக் கூடிய குத்துச்செடி ஆகும்.

அழுகண்ணி இதற்கு வடமொழியில் ருதந்தி மற்றும் சாவ்வல்யகரணி ஆகிய பெயர்கள் உள்ளன.

இதன் இலையானது கடலைச் செடியின் இலையை போன்று சற்று தடிமனாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும்.

இதன் இலையின் முனைப்பகுதியில் பனித்துளி போன்று நீர் கசியும். எனவே அழுகண்ணி செடிக்கு அடியில் எப்பொழுதும் மண்ணில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும்.

அழுகண்ணி மூலிகை   Alukanni Mooligai

இந்த நீரானது சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும் காரணத்தினால் இந்த செடியை சுற்றி எப்பொழுதும் எறும்புகள் மொய்த்துக் கொண்டே இருக்கும்.

ஜீவ சக்தி மூலிகை அழுகண்ணி என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றது.

சதுரகிரி மலையில் இது பெருமளவில் காணப்படுகின்றது.

இது பூண்டு வகையைச் சார்ந்தது என ஆங்கிலத்தில் கூறுவதுண்டு.

அழுகண்ணி மூலிகை   Alukanni Mooligai

மருத்துவ குணம்

நூறு வயது வரை ஆயுளை தரக்கூடிய ஒரு அற்புதமான காயகற்ப மூலிகையாகும்.

இது கத்தியினால் ஆன புண், துப்பாக்கி சூட்டினால் உருவான காயங்கள் மற்றும் விபத்து மற்றும் ஆறாத காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும் அதனால் நாம் நெடுங்காலம் உயிர் வாழலாம்.

மேலும் நரை, திரை, முப்பு, பிணி இவை எதுவும் இல்லாமல் நீண்ட காலம் நாம் உயிர் வாழ வழிவகுக்கும்.

இதனை  முறையான வகையில் சாப்பிட்டு வரும்பொழுது உடலில் வெட்டுப்பட்ட பாகங்கள் உடனே இணைக்கும் ஆற்றல் கொண்டது என சித்தர் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழுகண்ணி மூலிகை   Alukanni Mooligai

இதனையும் படிக்கலாமே

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning