கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Uses in Tamil

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Uses in Tamil

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil இதில் உள்ள சத்துக்கள் என்ன என்ன என்பதனை பற்றி முதலில் காண்போம்

கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று காரும் கருணை மற்றொன்று காராக் கருணை.காரும் கருணையினை பிடிகருணை என்றும் அழைப்பர்.

கருணைகிழங்கில் உள்ள சத்துகள் அனைத்தும் நமது உடலில் உள்ள பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து நமது உடலின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

செரிமான பிரச்சனை

நமது உடலில் செரிமானமானது சீராக இருந்தால் தான் நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். ஒரு சிலருக்கு சாப்பிடக்கூடிய உணவானது சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும்.

இதன் காரணமாக மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை தீர்க்க இயற்கை தந்த உணவு வகைகளில் இந்த கருணைக்கிழங்கு செரிமானத்திற்கு ஏற்றது.

karunai kilangu kulambu seivathu eppadi

உடல் எடை குறைய

 

அதிக உடல் எடை பிரச்சினையினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கருணைக்கிழங்கு சிறந்த ஒரு உணவு.

இந்த கருணை கிழங்கு உடல் எடையை குறைப்பதற்கு சிறப்பாக உதவுகின்றது. குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது மிக விரைவில் குறையும்.

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Uses in Tamil

senai kilangu kulambu in tamil

பசியின்மை குணமாக 

சாதாரணமாகவே மனிதர்களுக்கு சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் பசி உணர்வானது ஏற்பட்டால் அவர்களின் உடலானது ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு சில காரணங்களினால் பசியின்மை பிரச்சனை ஏற்பட்டு சரியாக உணவு சாப்பிட முடியாமல் போய், உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.

இந்த கருணைக்கிழங்கை பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றில் இருக்கக்கூடிய அமில சுரப்பை சீராக்கி பசியின்மை பிரச்சினையை போக்குகிறது.

Karunai Kilangu Tamil

இதய ஆரோக்கியம் 

நமது இதயமானது ஆரோக்கியமாக இருந்தால் தான் நீண்ட நாட்கள் நாம் உயிர் வாழ முடியும்.

இந்த இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு கருணைக்கிழங்கினை வாரத்தில் குறைந்தது இரண்டும் முறையாவது சாப்பிட்டு வருவதன் மூலமாக மாரடைப்பு, இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.

karunai kilangu fry in tamil

பித்தம் சரியாக 

உடலில் வாதம், பித்தம் கபம் ஆகிய மூன்று அதிகரிப்பதால் உடலில் தலைவலி, மயக்கம் இது போன்ற உபாதைகள் ஏற்படும்.

இந்த கருணைக்கிழங்கு பித்தத்தின் அளவினை சீராக வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை உடையது. பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உடையவர்கள் அடிக்கடி இந்த கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மேலும் இது பித்த கற்கள் உருவாவதை தடுக்கின்றது.

வலிமையான எலும்புகள்

எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்று. இந்த கருணைக்கிழங்கில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் எலும்புகளின் வலிமை குறைவாக இருப்பவர்கள் இந்த கருணைக்கிழங்கினை சாப்பிட்டு வருவது நல்லது.

karunai kilangu kulambu in tamil

மாதவிடாய் பிரச்சனை 

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உடலளவிலும் மற்றும் மனதளவிலும் சோர்வடைந்து உதாளின் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

இந்த தருணங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடைகிறது.

karunai kilangu puli kulambu in tamil

மலச்சிக்கல் குணமாக 

மலச்சிக்கல் மற்றும் குடலில்  உள்ள புண்கள் உள்ளவர்கள்   தினமும் ஒரு வேளை கருணை கிழங்கினாள்  சமைக்கப்பட்ட  உணவினை  சாப்பிடுவதன்  மூலமாக   குடலில் ஆசனவாயில் உள்ள  புண்களை விரைவில் ஆற்றுகிறது.

நீண்டநாள்  மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

கருணை கிழங்கு பயன்கள்

 கருணைக்கிழங்கு வறுவல்

நிறைய பேருக்கு கருணைக்கிழங்கு வறுவல் என்பது ரொம்பவே பிடித்தமான ஒரு உணவு.

 இந்த கருணைக்கிழங்கு சின்ன சின்ன துண்டாக வெட்டி, அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப மிளகாய்த்தூளை சேர்த்து செய்யப்படும் வறுவலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.

KARUNAI KILANGU VARUVAL

மசியல் அல்லது கூட்டு

வேக வைக்கப்பட்ட கருணைக்கிழங்கினை நன்றாக மசித்து மசாலா மற்றும் தேங்காய் ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்த்து செய்யப்படும் கூட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

KARUNAI KILANGU KOOTU

 கருணைக்கிழங்கு குழம்பு

புளி குழம்பு என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகவே உள்ளது. அதிலும் கருணைக்கிழங்கினை கொண்டு செய்யப்படும் புலி குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். 

இதில் சேர்க்கப்படக்கூடிய புலியானது கிழங்கின் அரிப்பு தன்மையை சுத்தமாக நீக்கி நாக்கிற்கு நல்ல ஒரு சுவையினை தருகிறது. 

KARUNAI KILANGU PULI KUZHAMBU

கருணை கிழங்கு அரிப்பு நீங்க

நீங்கள் முதல் முதலாக கருணைக்கிழங்கினை சமைக்க போகிறீர்கள் என்றால் ஒரு சில குறிப்புகளை பின்பற்றவும். 

கருணைக்கிழங்கினை சீவதற்கு முன்பாக கைகளில் சிறிது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள், அதற்கு மேல் கையுறை அணிந்து கொண்டு தோலை சீவினால் கைகளில் ஏற்படக்கூடிய அரிப்பு தடுக்கலாம். 

கருணைக்கிழங்கினை வேகவைக்கும் பொழுது புளித்தண்ணிர் அல்லது சிறிதளவு தயிர் சேர்த்து வேக வைப்பது நல்லது. இது கிழங்கு நன்றாக வெந்து மென்மையாக இருப்பதற்கு   உதவியாக இருக்கும். மேலும் அரிப்பு தன்மையை குறைப்பதற்கும் உதவும்.

மேலும்

மூலம் நோய் உள்ளவர்களுக்கு கருணைகிழங்கானது   சிறந்த இயற்கை குணமுடைய  மருத்துவ உணவாக  இருக்கிறது.

இந்த கிழங்கில் உள்ள துவர்ப்புச் சுவை இரத்த குழாய்களைச் சுருங்க செய்கிறது.
கிழங்குகளில் மிக சுலபமாக ஜீரணமாகவும் தன்மை கொண்டது.

குடலில் கிருமி சேராமல் இருக்கவும் வயற்றில் உள்ள உணவு அழுகாமல் வெளியேற்றுகிறது .

உடலில் கொழுப்பு அதிக அளவில் சேராமல் தடுக்கின்றது. இக்கிழங்கு கல்லீரலை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

இந்த தகவலினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே  கிளிக் செய்யவும் Click 

கிராம்பின் பயன்கள் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் Click 

 

Related Posts

Update Thamizha

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning