நார்த்தங்காய் பயன்கள் | Narthangai in Tamil

நார்த்தங்காய் பயன்கள் | Narthangai in Tamil

நார்த்தங்காயின் அற்புத மருத்துவ பயன்கள். நார்த்தங்காய் உருவ தோற்றமானது சாத்துக்குடியை போன்றே இருக்கும். ஆனால் இந்த பழமானது புளிப்பு சுவையை அதிகம் கொண்டது.

ஆனாலும், நன்கு பழுத்த நார்த்தங்காய் புளிப்பு சுவை அதிகம். நார்த்தங்காய் பூஞ்சை காளான்களை போக்குகிறது. நோய் வராமல் தடுக்கிறது. பசியை தூண்டக் கூடியதாக விளங்குகிறது.

வயிற்று வலியை போக்கக்கூடியது.

நார்த்தங்காய் பயன்கள் Narthangai in Tamil

உடல் சூடு

உடல் சூடு தணியா நார்த்தம்பழம் ஒன்றை தினசரி ஒன்று சாப்பிட வேண்டும். வாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புத்துணர்வு கிடைக்கும்.

இப்பழச் சாற்றை மதிய நேரங்களில் அருந்தி வருவதன் மூலமாக வெயிலின் தங்கத்திலிருந்து உடலை பாதுகாக்கலாம்.

நம்முடைய முன்னோர்கள் கூழ், பழைய சாதம் ஆகியவற்றை சாப்பிட, நாற்றங்காய் ஊறுகாயை பயன்படுத்தி வந்தார்கள்.

நார்த்தங்காய் ஊறுகாய் பசியை தூண்டி, உடல் நலத்தை காக்கிறது.

வாயு பிரச்சனை

வயிற்றில், வாயு பிரச்சனை ஏற்படும் நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து போட்டு மென்று தின்றால் வாயு கோளாறு விரைவில் நீங்கி விடும்.

நாற்த்தம் பழச்சாற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நார்த்தங்காய் பயன்கள் Narthangai in Tamil

வயிற்று புண்

நார்த்தங்காய் ஊறுகாய் வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது நார்த்தம் பழத்தை ஏதேனும் ஒரு வகையிலாவது உணவில் சேர்த்துக் கொண்டு வருவதன் மூலமாகா ரத்தம் சுத்தமடையும்.

வாதம் வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியின்மை, செரிமானத்தை சீராக்கும்.

சீதபேதி

நார்த்தங்காயின் மேல் தோலை, தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

சுகப்பிரசவம்

நாற்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலந்து கர்ப்பிணிகள் காலையும், மாலையும் அருந்தி வந்தால், சுகப்பிரசவம் நடைபெறும்.

நார்த்தங்காய் பயன்கள் Narthangai in Tamil

இரத்த அழுத்தம்

வயிற்று உப்புசமும் குறையும். தினமும் காலையில், வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாற்றை கலந்து உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடித்து வந்தால் பூரண குணமடைவர்.

இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. நார்த்தங்காய் சாறு ரத்தத்தையும், கல்லீரலையும் சுத்திகரிக்கக்கூடியது.

பித்தம்

ஆயுர்வேதம் நார்த்தங்காய் பித்தத்தை தணிக்கக்கூடிய குணம் கொண்டது என்கிறது. வாந்தி, மயக்கத்துக்கு மருந்தாகிறது.

தினமும் இரண்டு வேளைகள் நாட்டங்காய் சாறு குடிப்பதன் மூலம் பிரசவ கால வசதிக்கும், மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டவர்களுக்கும், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கும் நல்ல குணம் கிடைக்கும்.

சரும ஆரோக்கியம்

நார்த்தங்காய்க்கு சரும அழகை காக்கும் தன்மையும் உண்டு. ருமம் மாசு மருவின்றி இருப்பதற்கு காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாற்றை கலந்து குடிக்க வேண்டும்.

நார்த்தங்காய் பயன்கள் Narthangai in Tamil

தலை முடி

நார்த்தங்காய் சாற்றை தலையில் தடவி குளிப்பதன் மூலம் பொடுகையும், அதிகப்படியான எண்ணெய் பிச்சிக்கையும் போக்க முடியும்.

உடல் எடை

பொதுவாக எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வருவதன் மூலமாக உடல் எடையானது குறையும்.

என்பதைப் போலவே, நார்த்தம் பழச்சாற்றுக்கும் பருமனைக் குறைக்கும் தன்மை உண்டு.

மேலும்

நார்த்தங்காய் சாறு கலந்த தண்ணீர், காரணமே இல்லாம திடீரென வருகின்ற தலைவலிக்கு உடனடி நிவாரணம் தருகிறது.

சில துளிகள் நார்த்தம் பழச்சாற்றை தேநீர் தயாரிக்கும் போது அதில் கலந்து குடிக்கலாம்.

வைட்டமின் சி மிகுதியாக உள்ள காரணத்தினால் ஜலதோஷம் மற்றும் சுவாச பிரச்சனைகளை செய்யும். நார்த்தங்காயில் antioxidant அதிகம் உள்ளதால், புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தியும் அதற்கு உண்டு.

நார்த்தங்காயின் தோலை நீக்கிவிட்டு, சுளைகளை மென்று தின்று வர, வாய் துர்நாற்றம் நீங்கும்.

நார்த்தங்காயின் தோலுக்கு, கடுமையான மணம் உண்டு. அந்த மனம் கொசு மற்றும் சின்னச் சின்ன பூச்சிகளை கூடியது.

நார்த்தங்காய் பயன்கள் Narthangai in Tamil

கொசு கடித்த இடங்களின் மீது, நார்த்தம்பழச்சாற்றை விட்டு தேய்த்து வர, அரிப்பை தீர்க்கும்.

ரத்த காயங்களில் இடைவிடாமல் ரத்தம் வந்தால் காயத்தின் மீது நார்த்தங்காய் தோலின் சாற்றினை பிழிந்து விட்டால் ரத்தம் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.

நார்த்தங்காய், வயிற்றுப்புழு, வயிற்றுப் புண்ணைப் போக்கும்.

மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவும். ரத்தம் சுத்தமடையும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய் கசப்பு, குமட்டல், வாந்தி நிற்கும். நார்த்தம் பழச்சாறு உடன் பனங்கற்கண்டு இல்லையெனில் சிறிதளவு தேன் கலந்து அருந்தி வருவதன் மூலமாக உடல் வலுப்பெறும்.

இதனையும் படிக்காமலேமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning