பிரியாணி இலை பயன்கள் | Brinji Leaf in Tamil
பெரும்பாலும் பிரியாணி இலையிணை நறுமணத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றோம். ஆனால் பிரியாணி இலையில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
பிரியாணியில் ஆன்டி-பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை பூஞ்சை எதிர்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பேருதவி புரிகின்றது. செரிமான பிரச்சனை
பெருங்குடல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒன்றாக விளங்குகின்றது.
இந்த பிரியாணி இலை. ஒரு சில வகையான உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. பிரியாணி இலையில் உள்ள என்சைம்ஸ் என படக்கூடிய புரதப் பொருள் உடலில் உள்ள உணவுகள் எளிதில் செரிமானம் அடைவதற்கு உதவுகின்றது.
இதயம்
பட்டை இலைகளிலுள்ள ஆசிட் எனப்படும் கூடிய அமிலம் மற்றும் ரூட்டின் எனப்படும் கூடிய பொருளும் சேர்ந்து இதயத்தில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்களை வலுப்பெறச் செய்கின்றது.
மேலும் இது உடலுக்கு தீமை தரக்கூடிய கொழுப்பு சத்துகளை நீக்குவதற்கு உதவி புரிகின்றது.
சர்க்கரை நோய்
பிரியாணி இலையானது சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலில் இன்சுலின் சுரப்பினை அதிகப்படுத்துகிறது.
ஆகையால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பேருதவி புரிகின்றது.
வீக்கத்தை குறைக்க
இந்த பிரியாணி கடைகளில் மிக முக்கிய பயன்களில் ஒன்று ஆனது மூட்டு வாதம்.
மூட்டு வாதம் உள்ளவர்கள் பிரியாணி இலையை அடிக்கடி சேர்த்து வரும்பொழுது மூட்டுவாத பிரச்சனைகளிலிருந்து பூரண நிவாரணம் அளிக்கிறது.
வலி நிவாரணி
பலரும் மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். அவர்கள் பிரியாணி இலையை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணையினை எடுத்துக் கொள்ளவும்.
அந்த எண்ணெய் வலி ஏற்படக் கூடிய இடங்களில் மசாஜ் செய்து வருவதன் மூலமாக மூட்டுவலி குணமாகும்.
மேலும் தீராத தலைவலி உள்ளவர்களும் இந்த பிரியாணி இலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட என்னையினை கொண்டு மசாஜ் செய்வதன் மூலமாக தலைவலி ஒரு நிமிடத்தில் போய்விடும்.
புற்றுநோய்
இந்த பிரியாணி இலையில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய காஃப்பிக் அமிலம்,க்யூயர்சிடின், யூஜினால் போன்றவை உள்ளன.
இவை அனைத்தும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து உடலில் இருந்த அதனை வெளியேற்றுகின்றது.
எனவே நாம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கலாம்.
பொடுகு
இன்றைய காலகட்டத்தில் பொடுகு பிரச்சினை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. பொடுகினை சுத்தம் செய்வதற்கு வழக்கமாக நாம் ஷாம்பு கொண்டு தலை முடியினை கழுவுவோம்.
அதனுடன் குளிர்ந்த தண்ணீரில் பிரியாணி இலை சேர்த்து தலை முடியை நன்றாக அலச வேண்டும். மேலும் இந்த பிரியாணி இலையை கொண்டு எண்ணெய் பெறலாம்.
பிரியாணிஇலையினால் செய்யப்பட்ட எண்ணெயினை 15 சொட்டுகள் எடுத்து ஷாம்புவுடன் சேர்த்து மசாஜ் செய்வதன் மூலமாக பொடுகில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இதனையும் படிக்கலாமே
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்