சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா ?

சர்க்கரைவள்ளி கிழங்கு
சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா ?

நாம் சாப்பிடுவதற்கு பல வகை கிழங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படும் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு.

இந்த கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பூர்விகமாக கொண்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிர் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த கிழங்கினை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பயன்கள்

ஊட்டச்சத்து

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அதிக சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக உள்ளது.

இதில் வைட்டமின் ஏ பி மற்றும் இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

இவை நமது உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் சதைப்பகுதி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

ஆகவே இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கிழங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கொலஸ்ட்ரால்

இந்த காலகட்டத்தில் பெரும்பாலோனோருக்கு ஏற்படக்கூடிய ஒன்று கொலஸ்ட்ரால். கிழங்கு வகைகளில் சிறிதளவேனும் கொழுப்பு இருக்கும்.

ஆனால் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பின் அளவானது பூஜ்ஜியம் ஆகும்.

எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தாராளமாக சக்கரவள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

உள்காயம் மற்றும் காயங்கள்

நமது உடலில் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் மருந்துகளை தடவே சுலபமாக சரி செய்து கொள்ள முடியும்.

ஆனால் சில சமயங்களில் உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றது. ஆ

கவே நாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கிணை சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவை உடலின் உட்புறத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்துகின்றன.

கருவுறுதல்

திருமணமாகிய பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது சுலபமான சுலபமாக கரு உருவாகிறது.

சில பெண்களுக்கு சத்துக் குறைபாடு காரணமாக கருவுறுதல் தாமதம் ஆகின்றது. ஆகவே அவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் போலேட் எனப்படும் சத்து உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது பெண்களுக்கு கரு உருவாதல் உறுதியாகின்றது.

நுரையீரல்

நாம் சுவாசிக்கின்ற மூச்சு காட்டினால் தான் நாம் உயிருடன் இருக்கின்றோம் .நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மூச்சு சீராக விடமுடியும்.

எம்பஸ்ஸீமா என்கின்ற நோய் ஒருசிலருக்கு நுரையீரலில் உள்ள காற்றுப் பையில் உருவாகிறது.

இந்த நோய் உள்ளவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலமாக மூச்சு விடுவதில் ஏற்படக்கூடிய சிரமங்களை குறைக்கிறது.

அல்சர்

நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணியாக இருப்பது செரிமான உறுப்புகள் ஆகும்.

தினசரி காலை உணவினை உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும், கார வகை உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் குடலில் அல்சர் உருவாகின்றது.

ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்பொழுது வயிற்றுப்புண் விரைவில் குணமடையும்.

இளமையான தோற்றம்

பெற நம்மில் பலருக்கும் வயது முதிர்ந்தாளும் இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உள்ளது.

இதில் அதிகப்படியாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இதனை உணவோடு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பிரீ ராடிகல்ஸ் செல்களின் அழிவை தடுக்கின்றது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கி இளமையான தோற்றத்திற்கு வழிவகுக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

பெரும்பாலும் நாம் அனைவரும் நோய் ஏற்பட்ட பின்னர் தான் அதற்கான மருந்துகளை உட்கொள்வோம்.

ஆனால் நோய் வராமல் தடுப்பதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பலமாக இருக்க வேண்டும். இந்தக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் இரும்பு சத்துக்கள் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன.

சக்கரவள்ளி கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

எனவே எளிதில் தொற்று நோய் ஏற்படுவதை சுலபமாக தடுக்க முடியும்.

மலச்சிக்கல்

இன்றைய காலகட்டத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் மற்றும் ஒரு சில உணவு வகைகளாலும் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

ஒரு சில கிழங்கு வகைகளை நாளும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நார்ச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடும்பொழுது வயிற்றில் உள்ள புண்களை போக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மேலும் மூலம் வராமல் பாதுகாக்கிறது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஏனென்றால் இன்றைய உணவு பழக்க வழக்கம் தான் காரணம் என்று சொல்லவேண்டும் தொண்டையில் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக திகழ்வது புகையிலை சார்ந்த பொருட்கள்.

இத்தகைய புற்றுநோய் வராமல் இருக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிக அளவில் சாப்பிட வேண்டும் .இதில் நிறைந்துள்ள அதிகப்படியான சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கின்றது.

Here we have sweet potato tamil. Is also called. sweet potato tamil or sakkaravalli kizhangu or chakkaravalli kilangu or boomi sakkaravalli kilangu or sakkaravalli kizhangu benefits in tamil or sakkaravalli kizhangu benefits or sakkaravalli kilangu uses or sakkaravalli kilangu benefits in tamil or sakkaravalli kizhangu benefits or sakkaravalli kizhangu uses or சக்கரை வள்ளி கிழங்கு பயன்கள் or சக்கரவள்ளி கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை or சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்கள்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning